Pages

Saturday 29 October 2011

கூகிள் குரோமில் தமிழில் தட்டச்சு செய்ய....


தமிழ் குரோம் Transliterate extension அண்மைக் காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். 


அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 


இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர தற்போது ஒரு extension உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். 

அதற்கான இணைப்புக்கு இதன் மீது சொடுக்கவும்


நன்றி : புதுநுட்பம்

இந்திய குடிமக்களுக்கான ஆதார் அடையாள அட்டையை வாங்கி விட்டீர்களா?



இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.



27.10.2011 முதல் அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்களுக்கான அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து தர வேண்டும். 


அதன் பிறகு உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, உங்களை புகைப்படம் எடுப்பார்கள். இதெல்லாம் முடிந்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கார்டு ஒன்றினைக் கொடுப்பார்கள். 

தற்காலிக ஐடி கார்டு உங்களுக்குத் தரப்பட்ட 30 - 60 நாட்களுக்குள் உங்களுடைய வீட்டுக்கு உங்களின் ஒரிஜினல் கார்டினை அனுப்பி வைப்பார்கள்.  உங்களிடம் இருக்கும் தற்காலிக ஐடி மூலம் உங்களுடைய கார்டு ஸ்டேட்டஸைப் பற்றி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. 



இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இணைக்கப்படும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதனை வைத்து நீங்கள் நேபாளத்துக்குக் கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. 

நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  இதற்கான பணி விரிவு படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டைக்கான பதிவுப் பணி நவம்பர் 21-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

ஆதார் அடையாள அட்டை பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf

ஆதார் அடையாள அட்டை பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf



Wednesday 26 October 2011

இனாம் கேட்டு கை ஏந்தி நிற்கும் இரவலர்கள் அல்ல பத்திரிகையாளர்கள்....... அதிகாரிகளே புரிந்து கொள்ளுங்கள்...

சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷணத்தாலும், நிழல் ஆட்சியராக அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பதாகத் தன்னை கருதிக் கொண்டு செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பழனிசாமியாலும் சேலம் மாவட்டச் செய்தியாளர்களுக்கான உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டு தொடர்ந்து அவர்களைக் கேவலப்படுத்தி வரும் அவலம் குறித்து நமது முந்தைய பதிவுகளில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

நாலு காணி நிலத்தையா பத்திரிகையாளர்கள் கேட்டு விட்டார்கள்? 

அப்படித் தர முடியாதவாறு அவர்களால் கேட்கப்பட்டது தான் என்ன? என்ற வினாக்கள் இந்தத் தருணத்தில் எழுவது நியாயம்.......

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையார்களுக்கென தனி அறை ஒதுக்கப்படுவதும் அரசாங்கத்தால் அதில் மின்விசிறி, குடிநீர், தொலைபேசி போன்ற அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படும். சேலம் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் இந்த வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. 

சேலம் பழைய ஆட்சியர் அலுவலகம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்ட போதே அதன் வரைபடத்தில் பத்திரிகையாளர்களுக்கான அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு குறிக்கப்பட்டது. 

புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரையும் சற்றுத் தள்ளி உள்ள நாட்டாண்மைக் கழகக் கட்டடத்தில் கார் செட்டின் ஒரு ஓரமாக அறை தடுக்கப்பட்டு அதைப் பத்திரிகையாளர்களுக்கென தற்காலிகமாக ஒதுக்கீடு செய்தனர். அரசுக்குச் சொந்தமான இந்த அறையின் மின்சாரக் கட்டணம் இது நாள் வரையில் பத்திரிகையாளர்களாலேயே கட்டப்பட்டு வருகிறது. அவர்களே காசு கொடுத்துக் குடிநீரையும் வாங்கிக் கொண்டுள்ளனர். இது போன்ற கொடுமை வேறு எந்த ஊரிலும் இல்லை.

புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பும் அதில் பத்திரிகையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையைத் தராமல் இழுத்தடித்து ஹிம்சை செய்து வருகின்றனர் ஆட்சியரும், பி.ஆர்.ஓ.வும். "எங்களுக்கான அறையை எங்களிடம் ஒப்படையுங்கள்"என்று கேட்பதுதான் பத்திரிகையாளர்கள் செய்த முதல் குற்றம்.

ஆண்டு தோறும் மார்ச்31க்குள் புதுப்பித்து வழங்கப்பட்டு விடும் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டையை அக்டோபர் மாதம் வரையில் இன்னமும் வழங்கப்படவே இல்லை. இதை உடனடியாத் தாருங்கள் என்று கேட்பது குற்றம் நம்பர் டூ.

சேலத்தில் பெருகி விட்ட போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது மூன்றாவது குற்றம். 

இவைகள்தாம் நாங்கள் செய்த குற்றங்கள்.

எங்களது நியாயமான மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இதுவரையில் எங்களால் மூன்று மனுக்கள் நேரிலேயே தரப்பட்டன. நான்காவதாக ஒரு மனு மக்கள் குறை கேட்பு நாளில் பிரஜைகளில் ஒருவராக வரிசையில் நின்று எங்களால் தரப்பட்டது.

பி.ஆர்.ஓ.விடமும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் தரப்பட்டன. ஆனால் அதை அவரும் கண்டு கொள்ளவே இல்லை. 

இதனால் வெறுத்துப் போன நாங்கள் அண்மையில் கருப்புப் பட்டையினை சட்டையில் புகைப்படத்துடன் குத்திக் கொண்டு ஆட்சியர் அழைத்திருந்த செய்தியாளர் சந்திப்புக்குப் போனோம். அங்கும் எங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்பதை நேருக்கு நேரே சுட்டிக் காட்டினோம்.


அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னினையில் ஏற்பட்ட இந்த நெருக்கடியால்  ஆட்சியருக்கு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லாது போனது. போலி பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்கும் மாநகர் போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்டார் ஆட்சியர்.

இந்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வைத்த பி.ஆர்.ஓ.வால் அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை இன்னமும் பத்திரிகைகளுக்கு தர முடியாத பரிதாபத்தில் இருக்கிறார்.

காரணம்....?

போலி பத்திரிகையாளர்கள் மீது இந்த நாள் வரையில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.... ஒரு மண்ணும் இல்லை..... அவர்கள் தங்கள் மாமூல் வாழ்க்கை பாதிக்கப் படாதவர்களாக இது குறித்து எந்தவிதமான கவலையுமே படாதவர்களாக உள்ளனர். 


தனது உத்திரவு 
போலீசால் 
அலட்சியப்படுத்தப்பட்டது பற்றி 
சேலம் ஆட்சியர் 
கவலைப்பட்டதாகவேத் 
தெரியவில்லை.

அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த அடுத்த நாளில் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டையும், 24ந் தேதியன்று புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கென அறையினை ஒதுக்கீடு செய்து தருவதென்றும் ஆட்சியராலும் பி.ஆர்.ஓவாலும் அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களை மட்டம் தட்டும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையினை மறுத்து வினோதமான ஒரு காரணத்தைச் சொல்லி அதை எழுத்துப் பூர்வமாகவும் கையெழுத்திட்டு அசட்டுத் துணிச்சலுடன் தந்திருக்கிறார் பி.ஆர்.ஓ. பழனிசாமி...!


சென்னையில் 
செய்தியாளர்களாக 
மதிக்கப்படுபவர்களை 
இந்தக் கொம்பர்கள் 
சேலத்தில் 
அகதிகளைப் போல 
ஒதுக்குவார்களாம்..... 

என்னாங்கடா நியாயம் இது...?



உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஒரு வாரமாகி விட்டது. தேதி 27 ஆகி விட்டது. ஆனால், ஆட்சியராலும் பி.ஆர்.ஓ.வாலும் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயிற்று?

வழக்கம் போல மீண்டும் ஒருமுறை சேலம் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரும், பி.ஆர்.ஓ.வும் இணைந்து பட்டை நாமம் சாத்தி விட்டனர் என்பதே உண்மை ! 

சேலம் பத்திரிகையாளர்கள் இனாம் கேட்டு கை ஏந்தி நிற்கும் இரவலர்கள் அல்ல.......


என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....

ஆனால், இங்கோ.....

 எத்தனை முறை சுட்டாலும் உறைக்க மாட்டேன் என்கிறது. 

அடுத்து நாம் என்ன செய்யலாம் தோழர்களே.....?

யோசியுங்கள்...

விரைவில் கூடி முடிவெடுப்போம்.






'முற்றம்' கலைநிகழ்ச்சி - காணொளிக் காட்சியாக........

சாட்டைக்குச்சி ஆட்டம்:



பறையாட்டம்:


மாணவர்களின் மனம் கவர்ந்த முற்றம்...!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறை கடந்த 24ந் தேதி சேலத்தில் நடத்திய ஊடகவியல் மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தின் ஒரு நிகழ்வாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஊடகவியல் மாணவர்களின் வீதிப் பிரச் சாரக் கலைகுழுவான முற்றத்தின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.இந்த நிகழ்ச்சி விழாவுக்கு வந்திருந்த ஒட்டு மொத்த மாணவர்களையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. அதிலிருந்து சில சுவையான காட்சிகள்.



































யாழ்மாணவர்களுக்கு சேலத்தில் நடத்தப்பட்ட பயிலரங்கம்!

ஊடகவியல் மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கம் ஒன்று கடந்த 24ந் தேதி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறையின் சார்பில் அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் இணைந்து பங்கேற்றது.



இந்தப் பயிலரங்கத்தில் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர். டி. சி. எனப்படும் மீடியா ரிசர்ச் ட்ரைனிங் சென்டர் பிரிவில் பயிலும் இருபால் மாணவர் முப்பது பேருடன் சென்னைப் பல்கலைக் கழகத்தின்  இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறையின் மாணவ மாணவியர் முப்பது பேர் என மொத்தம் அறுபது பேர் பங்கேற்றனர். 







இவர்களுடன் வழக்கம் போல சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறையின் மாணவர்களும் இணைந்து பங்கேற்றனர். 


விழாவுக்கு வந்திருந்தவர்களை இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல் துறையின் தலைவரான திரு.வை.நடராசன், பேராசிரியர் திரு.நந்தகுமார் ஆகியோர் வரவேற்று உற்சாகப் படுத்தினர். இவர்களுடன் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றச் செயலாளர் திரு.தங்கராஜா, தலைவர் திரு வை.கதிரவன் ஆகியோரும் வரவேற்பில் பங்கேற்றனர்.


பயிலரங்கத்தினை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர்.முத்துச் செழியன் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். 




சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஊடகத் துறையில் பயிலும் மாணவியான  யாழ் தர்மினி பத்மநாதனின் படைப்பான 'எங்கட கதைதான்....' என்ற சிறுகதைத் தொகுப்பினை அரங்கத்துக்கு அறிமுகம் செய்து துணைவேந்தர் உற்சாகமூட்டினார்.


 ஊடகவியல் மாணவர்களுக்கு ஊரகச் செய்திகள் தொடர்பான உரைவீச்சை வழங்க வந்திருந்த சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தைச் சேர்ந்தவரும், மூத்த பத்திரிகையாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முதுநிலைச் செய்தியாளருமான திரு.ராஜசேகருக்கு துணைவேந்தர் திரு.முத்துச் செழியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். 


இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மீடியா ரிசர்ச் ட்ரைனிங் சென்டர் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான திரு.தேவநாதன், 'ஊரகப் புகைப்படக்கலை' பற்றிய நுணுக்கங்களை மாணவர்களுக்கு வழங்க வந்திருந்த சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தைச் சேர்ந்தவரும், விருதுகள் பல பெற்ற புகைப்படக் கலைஞரும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் புகைப்படக்காரருமாகிய திரு. சுதாகரனுக்கு நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தார். 


இதைத் தொடர்ந்து பயிலரங்கத்தின் முதல் நிகழ்வாக செய்தியாளர் திரு. ராஜசேகரன் ஊரகச் செய்திகள் பற்றிய தனது உரைவீச்சினை மாணவர்களுக்கு வழங்கினார். மாணவர்கள் அதனை ஆவலுடன் குறிப்பெடுத்துக் கொண்டனர்.




இதனையடுத்து புகைப்படச் செய்தியாளரான திரு. சுதாகரனின் ஊரகப் புகைப்படக்கலை பற்றிய விளக்கம் ஸ்லைடுகள் திரையிடப்பட்டு அதன் மூலம் வழங்கப்பட்டது. அதன் பிறகு மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.



மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 'ஊரகச் செய்திகளில் பருவ இதழ்கள்' என்ற தலைப்பில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும் குமுதம் குழும சேலம் சரகச் செய்தியாளருமான திரு.வை.கதிரவன் கருத்துரை வழங்கினார்.



இதன் தொடர்ச்சியாக அதே தலைப்பில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் செய்தித் தொடர்பாளரும், நக்கீரன் வாரமிருமுறை இதழின் சேலம் செய்தியாளருமான திரு.இளங்கோவன் தனது உரைவீச்சினை வழங்கினார்.



பயிலரங்கத்தின் இறுதியாக பேராசிரியர் திரு.இராமலிங்கம் ஊராகச் செய்திகள் எந்த மாதிரி எல்லாம் மாற்றங்களை சமுதாயத்தில்  ஏற்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக்காட்டி பங்கேற்பாளர்களின் ஐயங்களைத் தெளிய வைத்தார்.


பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் நிகழ்வின் முடிவில் வழங்கப்பட்டன.







பயிலரங்க நிறைவுரை ஆற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மீடியா ரிசர்ச் ட்ரைனிங் சென்டர் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான திரு.தேவநாதன் "எங்கள் நாட்டின் செய்தியாளர் அமைப்புடன் எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகப்பிரிவு இணைந்து செயலாற்றுகிறது.


அதைப் போன்றே சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்துடன் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் இணைந்து செயல்படுவது பெருமைக்குரிய ஒன்று" என்றார். அவரது நிறைவுரையுடன் விழா நிறைவு பெற்றது.