Pages

Sunday 24 February 2013

கண்ணீரை ஏற்றுக்கொள் எங்கள் தோழா!........

மறைந்த திரு. சதீஷ்குமார்



கண்ணீரை ஏற்றுக்கொள்
எங்கள் தோழா!........

 
வாழ்வின்

மற்றும் ஒரு பரிமாணத்தை

கற்றுக் கொடுத்து விட்டுச்

சென்றுவிட்ட

சக தோழனே!




நாம்

அன்றாடம் சந்திக்கும்

கொலை-தற்கொலை சாவுகள்

மற்றவர்களுக்கு வேண்டுமானால்

வெறும் செய்தியாகத் தெரியலாம்.

ஆனால் அவை

நமக்கான பாடங்கள் என்பதை

ஏன் கற்க மறந்தாய்?




அன்றாடம் சடலங்களைப்

பார்த்துப் பழகிவிட்டாலும்

எங்களுக்கு

உன் உயிரற்ற சடலம்

கொடுத்த அதிர்ச்சியை

நீ

உணர்வாயா?




உன்

விரைத்துப்போன கைகளை

தூக்குப் படுக்கைக்குள்

மடித்து வைத்து

வாகனத்தில் ஏற்றுகையில்,

எழுந்து வந்து

இன்ப அதிர்ச்சியூட்டமாட்டாயா

என்று எண்ணி ஏமாந்தது

உனக்குத் தெரியுமா?




எவ்வளவு பெரிய

செய்தியாளனாலும்

வாழ்வின் சில

விளங்க இயலாத

பக்கங்கள் குறித்து

செய்தி சேகரித்து

எழுதிட முடியாது என்பதையும்,

எவ்வளவு பெரிய

புகைப்படக் கலைஞனாக

இருந்தாலும் மனதின் சில

ஆழமான பக்கங்களை

புகைப்படம் எடுத்துக்

காட்டிவிட முடியாது என்பதையும்

நீ

உன் கடைசி புன்னகை மூலம்

உணர்த்தியதை

நாங்கள்

புரிந்துகொண்டோம்.




உன்னில் இருந்து

பாடங்கள் கற்றோம்.

வாழ்வின்

மற்றும் ஒரு பரிமாணம் கற்றோம்.

அதற்கு

எங்களது கண்ணீரை

உனக்கு

காணிக்கை ஆக்குகிறோம்

ஏற்றுக்கொள்!!



By: Thangaraja Kandhaswamy

வருந்துகிறோம்......

சேலம் செய்தியாளர் குடும்பத்தில் ஒருவரான
சேலம் தினமலர் நாளிதழின் புகைப்படக்காரர்
திரு. சதீஷ் குமார்
மார்ச்  24ந் தேதி
ஞாயிற்றுக்கிழமை மாலையில்  
உயிர் நீத்தார்.
அவருடைய மறைவுக்கு
சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம்
தனது ஆழ்ந்த இரங்கலைக்
கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறது......


Tuesday 12 February 2013

அடுத்த கட்ட சாதனைக்கு ஒரு ஆலோசனை

சேலம் செய்தியாளர் வளாகம் சிறப்புற அமையப் பாடுபட்ட சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விதமாகவும் அடுத்த கட்ட ஆலோசனைகளுக்காகவும்

திறப்பு விழா முடிந்ததும் புதிய அரங்கத்தில் நடந்த எமது முதல் கூட்டம்....


துணைத் தலைவர் திரு.சிவசுப்ரமணியம், தலைவர் திரு.கதிரவன், செயலர் திரு. தங்கராஜா, பொருளாளர் திரு.சரவணவேல் அமர்ந்திருக்க...

முதலில் பேசுகிறார் , திரு சுதாகர்!


திரு.மோகன்...


திரு.இளங்கோவன்....


திரு. சரவணன்...


திரு.மதியழகன்...


திரு.விஜயகுமார்...


திரு.சங்கர்...


திரு. துரை


திரு.ராமசாமி


திரு. விஜயகுமார்...


 திரு.சதீஷ்குமார்...


திரு,ஹரி...


சாதனைப் பூரிப்பில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினர்....


சேலம் செய்தியாளர் வளாகம் திறப்பு விழா காட்சிகள்!


ஆட்சியர் திரு.மகரபூஷணம் வருகை...


நலம் விசாரிக்கும் ஆட்சியரும் விநாயகா வேந்தரும்....


 டி.ஆர்.ஓ. திரு.பிரசன்ன வெங்கடேசன், ஆட்சியர் திரு. மகரபூஷணம் மற்றும் செய்தியாளர்களுடன்  விநாயகா வேந்தர் திரு சண்முகசுந்தரம்


சேலம் செய்தியாளர் வளாகத்தைத் திறக்கும்
சேலம் ஆட்சியர் திரு மகரபூஷணம்.



செய்தியாளர் அரங்கத்தைத் திறக்கும்
விநாயகாமிஷன்ஸ் வேந்தர் திரு சண்முகசுந்தரம்



குத்து விளக்கேற்றும் வி.ஐ.பிக்கள்!





செய்தியாளர் பணிமனையைத் திறக்கும்
சேலம் டி.ஆர்.ஓ. திரு.பிரசன்ன வெங்கடேசன்


கணினியை இயக்கி வைக்கும் ஆட்சியர்....


வி.ஐ.பிக்களுக்கு சால்வை அணிவித்து  கேடயங்கள் வழங்கிச்
சிறப்பு செய்யும் சேலம் செய்தியாளர்கள்...









நிகழ்வுகளைப் பூரிப்புடன் கவனிக்கும் விநாயகா வேந்தர்.....


சேலம் செய்தியாளர்களில்  ஒரு பகுதி....


அரங்கை நிர்மாணித்துக் கொடுத்த வேந்தர் தன் சார்பில் ஒரு நினைவுப் பரிசையும் செய்தியாளர்களுக்கு அளிக்கிறார்...


விழாவுக்கு வந்திருந்த மூத்த செய்தியாளர்களில் சிலர்...


ஆட்சியரின் சிறப்புரை...


விநாயகா மிஷன்ஸ் வேந்தரின் சிறப்புரை....



செய்தியாளர்களின் சார்பில் நன்றியுரை....


செய்தியாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறும் வேந்தர்...


செய்தியாளர்களுடன் ஒரு புகைப்படம்...


 விடை பெறும் வேளையில் குழிவாக இருந்த பகுதிக்குப் பாலம் அமைத்துத் தர  தனது உதவியாளருக்கு உத்தரவிடுகிறார் வேந்தர்....


செய்தியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கிளம்புகிறார் வேந்தர்...


சேலம் செய்தியாளர் வளாகம்..... கடந்து வந்த பாதை - ஒரு ப்ளாஷ் பேக்