Pages

Thursday 7 November 2013

இசைப்பிரியாவின் இரக்கமற்ற கொலைச் சம்பவம் !


கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 
அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு !

1. காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சிறைப்பிடித்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்ததாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இது தொடர்பான சர்வதேச விசாரணக்கு உத்தரவிட வேண்டும்.


2. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.

3. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நிரந்தரமாக விலக்கி வைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில்.

நாள் : 09.11.2013, சனிக்கிழமை / நேரம் : 4.30 மணி மாலை.

ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பு :
ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆஃப் தமிழ்நாடு