Pages

Tuesday 25 March 2014

வருந்துகிறோம்.....

சேலம் விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் மற்றும் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக வேந்தருமான 
திரு. சண்முகசுந்தரம் அவர்கள் 2014ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதி மாலையில் இயற்கை எய்தினார்.

அருட்கொடையாளர், ஆன்மீகச் செம்மல் என்று பலவாறும் புகழப்பட்ட திரு சண்முகசுந்தரம் ஒரு பத்திரிகையாளராகவும் இலக்கியவாதிகளால் அறியப்பட்டவர். விண்நாயகன் என்ற இதழ் இவரால் தொடங்கி நடத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களின் மீது அளவற்ற அன்பைக் கொண்டவரான திரு. சண்முகசுந்தரம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது இயங்கி வரும் செய்தியாளர் வாளாகத்தின் உள் அரங்கக் கட்டுமானத்தினைப் பெரும் பொருட் செலவில் உருவாக்கித் தந்து சேலம் பத்திரிகையாளர்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்றவர்.


திரு. சண்முகசுந்தரம் அவர்களின் மறைவு சேலம் செய்தியாளர் குடும்பத்துக்குப் பேரிழப்பாகும். அன்னாரது மறைவுக்கு சேலம் பத்திரிகையாளர்கள் சார்பிலும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment