Pages

Friday 27 April 2012

படித்ததில் பிடித்தது: அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!




அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!

Saturday 21 April 2012

உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை !



கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.




மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.


அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.


அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.


அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.


காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.


தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.


நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.


சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.


அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.


உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.


ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.


இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.


100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.


சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.


ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


தகவல்: அறிவு 


Friday 20 April 2012

காமராஜர் பல்கலைக் கழக இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு எழுத்துத் திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்....



மதுரை காமராஜர் பல்கலைக் கழக இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு எழுத்துத் திறனை வளர்ப்பதற்கான ஒரு வார காலப் பயிற்சி முகாம் மதுரையில் 09-04-2012 முதல் 15-04-2012 வரை நடந்தது.


பயிற்சி முகாமில் மாணவர்களுக்குஅறிவுரை வழங்கிப் பேசுகிறார் 
இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஒருங்கினைப்பாளர்
முனைவர்திரு.பி.ராஜேந்திரன்.


முனைவர் திரு.எ.ஆதித்தன் உரையாற்றுகிறார் .


முனைவர் திரு டிரூபன் சிறப்புரையாற்றினார்


முனைவர் திரு வி .ஜெயராமன் பேசுகிறார்.


முனைவர் திரு கே.வெற்றிவேல் உரையாற்றுகிறார்.





கருத்துரை வழங்கிய தி டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக்காரர்ஏ.எம்.சுதாகர்


பயிற்சி முகாமில் ஒன்றி விட்ட மாணவ மாணவியர்


பயிற்சிக்காக மதுரை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் & தினமணி அலுவலகத்திற்குப பேருந்தில் கிளம்பிச் செல்லும் மாணவ மாணவியர்.


மதுரை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்& தினமணி அலுவலகத்தில் செய்தித் தாள் அச்சாகும் விதம பற்றி விளக்கிறார் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஒருங்கினைப்பாளர் முனைவர். திரு.பி.ராஜேந்திரன்.


பயிற்சி பட்டறையில் பாடம் நடத்தும் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல்ஒருங்கினைப்பாளர் முனைவர் டாக்டர் திரு.பி.ராஜேந்திரன்.


பயிற்சி முகாமில் சான்றிதழ் பெறுகிறார் சேலம் தி டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக்காரர் ஏ.எம்.சுதாகர்


சான்றிதழ் பெறுகிறார் திருச்சி காலைக்கதிர் நிருபர் டி.பிரசன்னவெங்கடேஷ்

சான்றிதழ் பெறுகிறார் மதுரை தினமலர் நிருபர் செல்வராஜ்


சான்றிதழ் பெறுகிறார் மன்னார்குடி 
சன் டி வி நிருபர் எஸ்.கோபால கிருஷ்ணன்.


சான்றிதழ் பெறுகிறார் சிவகங்கைதினகரன் நிருபர் ஜி.கண்ணையன்


சான்றிதழ் பெறுகிறார் தினமலர் ஆர்.ரகு காளிதாஸ்


சான்றிதழ் பெறுகிறார் அகில இந்திய அளவில் சிறந்த பேச்சாளர் விருதுபெற்ற பிரபு.


மதுரை தாசில்தார் திரு எஸ்.பாலாஜியுடன் சேலம் தி டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக்காரர்ஏ.எம்.சுதாகர்


சான்றிதழ் பெறுகிறார் திருச்சி தினகரன் நிருபர் வேலுசாமி


சான்றிதழ் பெறுகிறார் மாணவி எம்.ஆர்.கிருத்திகா 


Tuesday 10 April 2012

Gmailல் Spamற்கு வரும் மின்னஞ்சல்​களை தானாகவே நீக்குவதற்​கு


சிறந்த மின்னஞ்சல் சேவையை வழங்கும் ஜிமெயிலில் சில சந்தர்ப்பங்களில் Spam பகுதிக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதுண்டு. இம் மின்னஞ்சல்களில் கணினி வைரஸ்களும் சேர்த்து அனுப்பப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.


எவ்வாறெனினும் இதற்கு வரும் மின்னஞ்சல்களை படிப்பதற்கு பலரும் நாட்டம் காட்டுவதில்லை. அதிக அளவில் வரும் இவற்றை பார்வையிடாது தானாகவே முற்றாக நீக்குதற்கு பின்வரும் முறைகளை கையாள்க.


1. உங்கள் மின்னஞ்சல் கணக்கினுள் நுழைந்து வலது புறத்தில் காணப்படும் Gmail Settingsற்கு செல்லவும்.


2. அதன்பின் தோன்றும் Filters படிவத்தில் Create a New Filter என்பதை தெரிவு செய்யவும்.


3. தொடர்ந்து தோன்றும் படிவத்தில் Has the Words என்பதில் “in:spam” என டைப் செய்து Create Filter with this Searchஐ கிளிக் செய்து OK கொடுக்கவும்.


4. அதன் பின் தோன்றும் விண்டோவில் Delete it  என்பதை தெரிவு செய்து, தொடர்ந்து Apply filter என்பதை கிளிக் செய்து Create Filter என்பதை அழுத்தவும்.

Sunday 8 April 2012

"காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ?" மத்திய அரசை திணற வைத்த ஒரு சுட்டிப் பெண்!


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது? என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. 




பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார்? என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட தேடிப் பார்த்து உள்ளார். அங்கும் அதற்கான பதில் கிடைக்கவில்லை. 


தன்னுடைய சாதரமான கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை ஐஸ்வர்யா கேட்டுள்ளார் .


இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்றுப் பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.


ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.


இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.


இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு பெருமளவு வாழ்த்துகள்குவியத் தொடங்கி உள்ளன. இப்படிப் பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். ஆனால் அதற்கான பதில்தான் கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.


http://www.ndtv.com/article/india/10-year-old-s-rti-on-father-of-the-nation-title-for-gandhi-193508


http://www.hindustantimes.com/India-news/Lucknow/Who-named-Mahatma-Gandhi-father-of-nation-Govt-foxed/Article1-834824.aspx

Saturday 7 April 2012

தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்க - HOTSPOT SHIELD


உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிறFacebook, Yahoo Chat, Twitter போன்றவற்றை தடை செய்துவிடலாம்!

ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்! உதாரணமாக UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!

வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?

இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்!- HOTSPOTSHIELD
இப்போ TASKBARல வர்ற HOTSPOT SHIELD பட்டனை கிளிக் செய்து CONNECT பண்ணவும்!
இனி உலகத்தில உள்ள எல்லா தளங்களையும் பார்க்க முடியும்! யார் தடுத்தாலும் சரி!

குறிப்புகள் :
  • HOTSPOT SHIELD உங்களுக்கென ஒரு தனி புதிய IP உருவாக்குகிறது.
உங்களுக்கு வேண்டிய தளத்தைப் பார்த்துவிட்டு HOTSPOT SHIELDDISCONNECT செய்துவிடவும்!

ஏன்?
  • HOTSPOT SHIELD உபயோகிக்கும்போது இணையதள வேகம் குறைவாக இருக்கும்
  • HOTSPOTSHIELD விளம்பரம் வராது!
முக்கியக் குறிப்பு: கண்ட கண்ட தளங்களைப் பார்க்கவோ அல்லது பிட்டு வீடியோக்களை பார்க்கவோ இதை உபயோகப்படுத்தினால் கம்பேனி பொறுப்பல்ல!!!

நன்றி: "நிலாப் பெண்ணுக்கு...." இணைய தளம்

Monday 2 April 2012

தமிழக எம்.எல்.ஏ.க்களின் ஈ.மெயில் முகவரிகள் உங்களுக்காக....


ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது. 

இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

எல்லா M.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது 

அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 

234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது.....

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in

2 Alandur - mlaalandur@tn.gov.in

3 Alangudi - mlaalangudi@tn.gov.in

4 Alangulam - mlaalangulam@tn.gov.in

5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in

6 Anaicut -- mlaanaicut@tn.gov.in

7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in

8 Andimadam --- mlaandimadam@tn.gov.in

9 Andipatti----mlaandipatti@tn.gov.in

10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in

11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in

12 Arantangi-- mlaarantangi@tn.gov.in

13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in

14 Arcot - mlaarcot@tn.gov.in

15 Ariyalur --mlaariyalur@tn.gov.in

16 Arni -- mlaarni@tn.gov.in

17 Aruppukottai -mlaaruppukottai@tn.gov.in

18 Athoor--- mlaathoor@tn.gov.in

19 Attur -mlaattur@tn.gov.in

20 Avanashi -mlaavanashi@tn.gov.in

21 Bargur -mlabargur@tn.gov.in

22 Bhavani---mlabhavani@tn.gov.in

23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in

24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in

25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in

27 Chengam---mlachengam@tn.gov.in

28 Chepauk---mlachepauk@tn.gov.in

29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in

30 Cheyyar---mlacheyyar@tn.gov.in

31 Chidambaram---mlachidambaram@tn.gov.in

32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in

33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in

34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in

35 Colachel---mlacolachel@tn.gov.in

36 Coonoor----mlacoonoor@tn.gov.in

37 Cuddalore---mlacuddalore@tn.gov.in

38 Cumbum---mlacumbum@tn.gov.in

39 Dharapuram---mladharapuram@tn.gov.in

40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in

41 Dindigul---mladindigul@tn.gov.in

42 Edapadi---mlaedapadi@tn.gov.in

43 Egmore---mlaegmore@tn.gov.in

44 Erode----mlaerode@tn.gov.in

45 Gingee---mlagingee@tn.gov.in

46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in

47 Gudalur----mlagudalur@tn.gov.in

48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in

49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in

50 Harbour-----mlaharbour@tn.gov.in

51 Harur----mlaharur@tn.gov.in

52 Hosur---mlahosur@tn.gov.in

53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in

54 Jayankondam---mlajayankondam@tn.gov.in

55 Kadaladi---mlakadaladi@tn.gov.in

56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in

57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in

58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in

59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in

60 Kangayam---mlakangayam@tn.gov.in

61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in

62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in

63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in

64 Karur----mlakarur@tn.gov.in

65 Katpadi----mlakatpadi@tn.gov.in

66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in

67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in

68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in

69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in

70 Kolathur---mlakolathur@tn.gov.in

71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in

72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in

73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in

74 Kulithalai----mlakulithalai@tn.gov.in

75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in

77 Kuttalam---mlakuttalam@tn.gov.in

78 Lalgudi---mlalalgudi@tn.gov.in

79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in

80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in

81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in

82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in

83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in

84 Mangalore----mlamangalore@tn.gov.in

85 Mannargudi----mlamannargudi@tn.gov.in

86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in

87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in

88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in

89 Melur---mlamelur@tn.gov.in

90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in

91 Mettur---mlamettur@tn.gov.in

92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in

93 Morappur---mlamorappur@tn.gov.in

94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in

95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in

96 Musiri---mlamusiri@tn.gov.in

97 Mylapore---mlamylapore@tn.gov.in

98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in

99 Nagercoil---mlanagercoil@tn.gov.in

100 Namakkal---mlanamakkal@tn.gov.in

101 Nanguneri---mlananguneri@tn.gov.in

102 Nannilam----mlanannilam@tn.gov.in

103 Natham-----mlanatham@tn.gov.in

104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in

105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in

106 Nilakottai---mlanilakottai@tn.gov.in

107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in

108 Omalur---mlaomalur@tn.gov.in

109 Orathanad---mlaorathanad@tn.gov.in

110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in

111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in

112 Palacode---mlapalacode@tn.gov.in

113 Palani----mlapalani@tn.gov.in

114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in

115 Palladam---mlapalladam@tn.gov.in

116 Pallipattu---mlapallipattu@tn.gov.in

117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in

118 Panruti---mlapanruti@tn.gov.in

119 Papanasam---mlapapanasam@tn.gov.in

120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in

121 ParkTown----mlaparktown@tn.gov.in

122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in

123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in

124 Perambalur----mlaperambalur@tn.gov.in

125 Perambur---mlaperambur@tn.gov.in

126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in

127 Peravurani---mlaperavurani@tn.gov.in

128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in

129 Pernambut---mlapernambut@tn.gov.in

130 Perundurai---mlaperundurai@tn.gov.in

131 Perur---mlaperur@tn.gov.in

132 Pollachi---mlapollachi@tn.gov.in

133 Polur---mlapolur@tn.gov.in

134 Pongalur---mlapongalur@tn.gov.in

135 Ponneri---mlaponneri@tn.gov.in

136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in

137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in

138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in

139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in

140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in

141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in

142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in

143 Ranipet---mlaranipet@tn.gov.in

144 Rasipuram----mlarasipuram@tn.gov.in

145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in

146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in

147 Royapuram---mlaroyapuram@tn.gov.in

148 Saidapet---mlasaidapet@tn.gov.in

149 Salem -I---mlasalem1@tn.gov.in

150 Salem-II---mlasalem2@tn.gov.in

151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in

152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in

153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in

154 Sankari---mlasankari@tn.gov.in

155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in

156 Sattangulam----mlasattangulam@tn.gov.in

157 Sattur---mlasattur@tn.gov.in

158 Sedapatti----mlasedapatti@tn.gov.in

159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in

160 Sholavandan---mlasholavandan@tn.gov.in

161 Sholinghur----mlasholinghur@tn.gov.in

162 Singanallur---mlasinganallur@tn.gov.in

163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in

164 Sivaganga----mlasivaganga@tn.gov.in

165 Sivakasi---mlasivakasi@tn.gov.in

166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in

167 Srirangam---mlasrirangam@tn.gov.in

168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in

169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in

170 Talavasal---mlatalavasal@tn.gov.in

171 Tambaram---mlatambaram@tn.gov.in

172 Taramangalam---mlataramangalam@tn.gov.in

173 Tenkasi----mlatenkasi@tn.gov.in

174 Thalli---mlathalli@tn.gov.in

175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur---mlathanjavur@tn.gov.in

177 Theni---mlatheni@tn.gov.in

178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in

179 Thirumayam---mlathirumayam@tn.gov.in

180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in

181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in

182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in

183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in

184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in

185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in

186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in

187 Thottiam---mlathottiam@tn.gov.in

188 Tindivanam---mlatindivanam@tn.gov.in

189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in

190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in

191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in

192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in

193 Tiruppattur-----mlatiruppattur@tn.gov.in

194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in

195 Tirupporur----mlatirupporur@tn.gov.in

196 Tiruppur----mlatiruppur@tn.gov.in

197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in

198 Tiruttani----mlatiruttani@tn.gov.in

199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in

200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in

202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in

203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in

204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in

205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in

206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in

207 Triplicane----mlatriplicane@tn.gov.in

208 Tuticorin---mlatuticorin@tn.gov.in

209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in

210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in

211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in

212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in

213 Usilampatti---mlausilampatti@tn.gov.in

214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in

215 Valangiman----mlavalangiman@tn.gov.in

216 Valparai----mlavalparai@tn.gov.in

217 Vandavasi----mlavandavasi@tn.gov.in

218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in

219 Vanur----mlavanur@tn.gov.in

220 Varahur-----mlavarahur@tn.gov.in

221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in

222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in

223 Vedasandur---mlavedasandur@tn.gov.in

224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in

225 Vellakoil---mlavellakoil@tn.gov.in

226 Vellore---mlavellore@tn.gov.in

227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in

228 Vilavancode---mlavilavancode@tn.gov.in

229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in

230 Villupuram---mlavillupuram@tn.gov.in

231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in

232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in

233 Yercaud---mlayercaud@tn.gov.in

234 ThousandLights---mlathousandlights@tn.gov.in
Collapse this post