Pages

Saturday 29 October 2011

இந்திய குடிமக்களுக்கான ஆதார் அடையாள அட்டையை வாங்கி விட்டீர்களா?



இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.



27.10.2011 முதல் அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்களுக்கான அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து தர வேண்டும். 


அதன் பிறகு உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, உங்களை புகைப்படம் எடுப்பார்கள். இதெல்லாம் முடிந்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கார்டு ஒன்றினைக் கொடுப்பார்கள். 

தற்காலிக ஐடி கார்டு உங்களுக்குத் தரப்பட்ட 30 - 60 நாட்களுக்குள் உங்களுடைய வீட்டுக்கு உங்களின் ஒரிஜினல் கார்டினை அனுப்பி வைப்பார்கள்.  உங்களிடம் இருக்கும் தற்காலிக ஐடி மூலம் உங்களுடைய கார்டு ஸ்டேட்டஸைப் பற்றி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. 



இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இணைக்கப்படும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதனை வைத்து நீங்கள் நேபாளத்துக்குக் கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. 

நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  இதற்கான பணி விரிவு படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டைக்கான பதிவுப் பணி நவம்பர் 21-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

ஆதார் அடையாள அட்டை பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf

ஆதார் அடையாள அட்டை பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf



1 comment:

  1. பயனுள்ள பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete