Pages

Wednesday 5 September 2012

போதையில் ஆட்டம் போட்ட போலீஸ்காரர்!

நாகர்கோவிலில் நடந்த அசிங்கம் இது.....


நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் சாலையில் போதை தலைக்கேற போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சாலையில் சென்றவர்களிடம் எல்லாம் வம்பிழுத்து கலாட்டா செய்த காட்சி இது... 

இந்தக் கண்ணியம் மிக்க காவலர் அந்தச் சாலையில் சென்ற சிறுவயது பெண்களைப் பார்த்து விசிலடித்து சைகை செய்திருக்கிறார். அதே போல பர்தா  அணிந்து சென்ற பெண் ஒருவரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். இது போதாது என சாலையோரத்துப் பழக் கடைக்காரர்களிடம் ஓசியில் பழம் தரச் சொல்லி கலாட்டா செய்கிறார். 

இதைப் பார்த்து பொறுக்கமுடியாத பொது ஜனம் ஒருவர் "நீங்களே இப்படி செய்யலாமா?" என்று கேட்க "உன்னைக் கொன்னுருவேன்" என்று அவரை நாக்குழற எச்சரிக்கிறார்... 

"போதையை போட்டுக்கிட்டு வீட்டில இருக்க வேண்டியதுதானே...." என்று ஆதங்கத்துடன் கேட்ட ஒருவரிடம்... "ஏன் நீ லீவு வங்கித் தாயேன்" என்று நக்கலடிக்கிறார்...

தன்னைத் தட்டிக் கேட்டவர்களிடத்தில் "நீ என்ன ரௌடியா?" என அந்த போலீஸ்காரர் கேட்க, "உங்களை தப்பு செயாதேனு தட்டிக் கேட்ட பொதுஜனத்தைக் கொன்னுடுவேன்  என மிரட்டின நீங்கதான் சார் நிஜ ரௌடி" என பஞ்ச்சிங்காக பதில் வர அதற்கு மேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை.

இந்தக் காட்சிகளை சிலர் படம் பிடிக்க, "நல்லா படம் பிடிச்சி நாளைக்குக் காலைல செய்தியா பத்திரிகைல வர்ற மாதிரி போடுங்க சார்!" என ஒருவர் சொல்ல... அதற்கும் சளைக்காமல் அந்தக்  கர்ம வீரர் "ஆமா எல்லா பத்திரிகைளையும் வரணும்" என்கிறார் சளைக்காமல்! 

இந்தக் கூத்துகளை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அவசர போலீஸ் அழைப்பு எண்ணுக்கும் அழைத்து பொது மக்கள் புகார் செய்தும் ஒருவர் கூட அந்த இடத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பதுதான் ஹை லைட்டே! 

போலீஸ் லட்சணத்தைப் பார்த்துக்குங்க சார்!

நன்றி: சுகந்தி தமிழச்சி

No comments:

Post a Comment