Pages

Tuesday 11 September 2012

கார்ட்டூனிஸ்ட்டுக்கு ஒரு நீதி! காங்கிரசாருக்கு ஒரு நீதி!

இந்திய தேசிய சின்னமான மூன்று சிங்கங்களுக்குப் பதிலாக மூன்று ஊழல் நரிகளைப் படம் வரைந்து அதனைத் தேசிய சின்னம் என தனது கார்ட்டூன் வாயிலாக அண்மையில் கிண்டல் செய்திருந்தார் பிரபல கார்ட்டூனிஸ்ட் அஸீம். இதற்கு மத்தியில் ஆள்வோர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு கார்ட்டூனிஸ்ட் அஸீமை இந்திய தேசிய சின்னத்தை அவமதித்ததாகக்  கைதும் செய்தனர்.


ஆனால், அதே இந்திய தேசிய சின்னத்தில் காங்கிரஸ் பிரமுகர்களின் முகத்தை சிங்கத்தின் முகங்களுக்குப் பதிலாகப் பொருத்திப் போஸ்டர் அடித்துள்ளனர் மதுரை காங்கிரசார். 


இது தேசிய சின்னத்தினை அவமதிப்பது ஆகாதா?

நாட்டு நடப்பை நையாண்டி செய்து கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகையாளர் அஸீமுக்கு என்ன சட்டப் பிரிவில் தண்டனை வழங்கப்பட்டதோ அதே சட்டப் பிரிவின்படி இந்தப் போஸ்டரை அடித்துள்ள காங்கிரசாரும் குற்றவாளிகளே.

ஆனால் இன்றளவில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கார்ட்டூனிஸ்ட்டுக்கு ஒரு நீதி! காங்கிரசாருக்கு ஒரு நீதி!

வாழ்க ஜனநாயகம்!

No comments:

Post a Comment