Pages

Saturday 4 May 2013

உலக ஊடக சுதந்திர தினம்........


  மே மாதம் பதினைந்தாம் நாள் உலக ஊடக சுதந்திர நாளாக (World Press Freedom Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாக ‘உலக ஊடக சுதந்திர நாள்’  பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாள் பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "ஊடக சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டு தோறும்  யுனெஸ்கோ நிறுவனத்தினர்  யுனெஸ்கோ/ கில்லெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது  வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

இவ் விருது 1986 டிசம்பர்17 இல் கொல்லப்பட்ட  கொலம்பியப் பத்திரிகையாளர் "கில்லெர்மோ இசாசா" (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மே மூன்றாம் நாள் நமது  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினரால்  சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தியாளர் அரங்கத்தில் 'உலக ஊடக சுதந்திர தினம்' சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
    
நம்முடைய சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் மட்டுமே  போற்றுதலுக்குரிய உலக ஊடக சுதந்திர நாளினை நினைவு கூறும் வகையில் அகில இந்தியாவிலேயே கொண்டாடிய ஒரே பத்திரிகையாளர் அமைப்பு என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.

சிறப்பு வாய்ந்த இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷணம் தலைமை உரையினை நிகழ்த்தினார். சேலம் பெரியார் பல்கலைக் கழக ஊடகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. சுப்ரமணியம்,திரு. தமிழ்ப் பரிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையினைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை நிகழ்த்தினார். ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றிய அரிய தகவல்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
உலக ஊடக சுதந்திர தின விழாவிலிருந்து சில படங்கள்....
செய்தியாளர் அரங்கிற்கு வரும் ஆட்சியர்...



பி.ஆர்.ஓ  திரு. பழனிசாமி அவர்களின் அறிமுக உரை....


வரவேற்புரை ..... திரு. சிவசுப்ரமணியன் 


தொகுப்புரை... திரு. மோகன் 


வாழ்த்துரை... திரு. தமிழ்ப் பரிதி, 
உதவிப் பேராசிரியர். பெரியார் பல்கலைக் கழகம் 



திரு. சுப்ரமணியம் , 
உதவிப் பேராசிரியர். பெரியார் பல்கலைக் கழகம்





தலைமையுரை.... 
சேலம் ஆட்சியர் திரு. மகரபூஷணம் 


சிறப்புரை..... திரு.ஸ்டாலின் குணசேகரன் 




பார்வையாளர்கள்....



நினைவுப் பரிசளிப்பு....






நன்றியுரை.... திரு. கதிரவன் 


உலக ஊடக சுதந்திர தின விழா முடிவில் 
சிறப்பு அழைப்பாளருடன் சேலம் செய்தியாளர்கள்...


சிறப்புற நடைபெற்ற இந்த விழா ஏற்பாடுகளில் சேலம் பெரியார் பல்கலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டது கூடுதல் சிறப்பு.

அடுத்த ஆண்டில் இந்த தினத்தை இதை விடவும் சிறப்பாக நடத்திட உறுதி பூண்டனர் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினர்.


No comments:

Post a Comment