Pages

Wednesday 29 June 2011

பத்திரிகையாளர்கள் கொலை ‘சாதனை’ பட்டியலில் இந்தியா


பத்திரிகையாளர்கள்­­ கொலை செய்யப்படுவதில் தீர்வு காண முடியாத நாடுகள் பட்டியலில் இந்தியா 7வது இடம் பெற்றுள்ளது. பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத பட்டியலில், மோசமான சாதனை நிலையில் இந்தியா நின்று கொண்டிருக்கிறது.

 கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம்தேதி வரை 13 நாடுகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரி கையாளர்கள் கொலைகளில் தீர்வு காண முடியாத நிலையில் உள்ளன. பத்திரிகையாளர்கள் கொலையில் 70 சதவீதம் பேர் பணி சார்ந்த விஷயங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

 ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தீர்வு காணப்படாத பத்திரிகையாளர்கள் கொலை விபரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

 தீர்வு காணப்படாத பத் திரிகையாளர்கள் கொலைகள் பட்டியலில் இராக் முத லிடத்தில் உள்ளது. அங்கு இந்த காலகட்டத்தில் 92 தீர்வு காணப்படாத பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டனர். பிலிப்பைன்சில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பத்திரிகையாளர்கள் கொலையில் இராக், சோமாலியா, பிலிப் பைன்ஸ், இலங்கை, கொலம்பியா நாடுகள் உள்ளன.

பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பான பட்டியல் இந்த மாத துவக்கத்தில் வெளியானது. பாகிஸ்தான் 10வது இடத்திலும், வங்கதேசம் 11வது இடத்திலும் உள்ளன. பத்திரிகையாளர்கள் கொலை பட்டியலில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன

நன்றி : rootsredindia

No comments:

Post a Comment