Pages

Saturday 28 January 2012

எமது அஞ்சலி!


இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளரான ஹோமாய் வ்யாரவாலா தனியார் மருத்துவமனையில் ஜன,4ந் தேதியன்று காலமானார். அவருக்கு வயது 98.





1913 டிசம்பர் 9 ல் பிறந்தவர் ஹோமாய். பார்சி குடும்பத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் வளர்ந்தார். 1942ல் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைப் படம்பிடித்த இவர், பிரிட்டிஷ் இன்பார்மேஷன் சர்வீஸில் பணியில் இருந்தார்.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் படுக்கையில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த அவர் பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.





ஜூன் 3ல் இந்தியப் பிரிவினை குறித்து நடந்த ஓட்டெடுப்பு, 1947 ஆக.15 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் கொடியேற்று வைபவம், மௌண்ட் பேட்டன் பிரபு விடைபெறும் நிகழ்வு, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தத்ரூபமாகப் படம்பிடித்தவர் இவர்.



ஹோமாய்க்கு பத்ம விபூஷன் விருது கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டது. இவரது கணவர் மானெக்‌ஷா வ்யாரவாலா 1970ல் இறந்துவிட்டார்.



இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளரான ஹோமாய்க்கு சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

ஹோமாய் எடுத்த காலத்தை வென்று நிற்கும் படங்களில் சில...











No comments:

Post a Comment