Pages

Friday 22 July 2011

செய்தியாளர்கள் யார்? – விளக்கக் கட்டுரை பாகம் 2

(விக்கிப்பீடியாவில் இருந்து நமது வலைப்பூவுக்காக இக் கட்டுரையைத் தொகுத்தளித்திருப்பவர்: செய்தியாளர் திரு.மதியழகன்)


செய்தியாளரின் தகுதிகள்




ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும்கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை இங்கு விளக்கலாம்.

* செய்தி மோப்பத் திறன் (Nose for News)
செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம்பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக்கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவ -ராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்துஇருப்பவராகவும், சொல்லும் முறையில் தனித்துஇருப்பவராகவும் விளங்க வேண்டும்.

* நல்ல கல்வி அறிவு
செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும்பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தா ல்தான்அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாக -வும் அளிக்க முடியும்.

* சரியாகத் தருதல்
செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy)தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.எதனையும் சரிபார்க்காமல் ஊகம் செய்து எழுதக்கூடாது.அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்'எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப் பெற வேண்டும்' என்பது தான் செய்தியாளரின் குறிக்கோளாகஇருக்க வேண்டும்.

* விரைந்து செயல்படல்



செய்தியாளர் வியப்பூட்டும் வகையில் விரைவாகச் (Speed) செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம் தயாராகும் முன்பு, திறமையான செய்தியாளர் தான் சேகரித்த செய்திகளை அனுப்புவார். செய்தியைச் சரியாகப் பெறவேண்டும்; உடனேயும் பெற வேண்டும் என்பதனைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.

* நடுநிலை நோக்கு 
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமல்செய்தியாளர் நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்பவேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்து எந்தச் சமயத்திலும் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்துவத்தை மாற்றவோ, கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக் கூடாது.

*செய்தி திரட்டும் திறன் 
செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்து செய்தியைஇனங்கண்டு உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும்.சேகரித்த செய்தியை முறைப் படுத்தி, செய்தியாக வடிவம் அமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளருக்கு இருக்கவேண்டும். இத் திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் பெற இயலும்.

* பொறுமையும், முயற்சியும் 
செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும்.அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது. பதறிய காரியம்சிதறும் என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத்தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்துஅதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்ற வரை பல இடையூறுகள் ஏற்படலாம். அவற்றை எல்லாம்மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினை யாக்கும் என்றதெளிவோடு செயல்படுகிற செய்தியாளர் களால் தான்அரிய செயல்கள் செய்ய முடியும்.

* சொந்தமுறை அல்லது தனித்தன்மை 
செய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது. சிறந்த செய்தியாளர்கள்செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும்.

* நல்ல தொடர்புகள்
செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கியதொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறுதொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும்.மக்கள்தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது

* நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
செய்தி தருகின்றவர்கள் தங்கள் மீது பத்திரிகையும் பொதுமக்களும் வைத்திருக்கும் நம்பகத் தன்மையைக்கட்டிக் காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்திகொடுக்கிறவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. செய்தி தருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்.

* நேர்மை (Honesty)
செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச் செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியைவேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல்அறமாகாது.

* கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை 
செய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ, வேறுநன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர்புகழ் பெறுவதற்காகவும், விளம்பரம் ஆவதற்காகவும் செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள்அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர்விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள்செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல்சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.

செயல் திறன்



செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும்செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும்தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.

* ஏற்கும் ஆற்றல் 
புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுதும், புதியமனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். புதியனவற்றை ஏற்கும் மனப் பக்குவம் இருக்க வேண்டும்.

* தன்னம்பிக்கை 
செய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு பணிசெய்ய வேண்டும். என்னால் முடியும், செயற்கரியன செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றைஎளிதாகச் செய்யமுடியும்.

இனிய ஆளுமை (Personality)



செய்தியாளர் இனிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவானதோற்றமும், இனிமையாய்ப் பழகும் பண்பும்கொண்டவர்களாகச் செய்தியாளர்கள் இருக்க வேண்டும்.அத்தகையவர்களால் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.

* தெளிவாகக் கூறும் ஆற்றல்
செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும்தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச்சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறியவேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

* மரபுகளைப் பற்றிய அறிவு 
சமுதாயம், சமயம் தொடர்பான செய்திகளைத் திரட்டித்தரும் பொழுது மரபுகளை அறிந்திருக்கவேண்டும். மரபுகளுக்குமுரண்படும் வகையில் செய்திகளைக் கொடுக்க நேரிட்டால்கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

சட்டத் தெளிவு 
எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படிகுற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்கவேண்டும். சட்டத் தெளிவு இல்லாமல் எதையும்செய்தி ஆக்கினால் அவருக்கும், செய்தித்தாளுக்கும்தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக, சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாகஇருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 

செய்தியாளருக்கான 

சலுகைகள்


தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அவர்களால் ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் இரண்டு செய்தியாளர்கள், ஒரு  புகைப்படக்காரர், ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இரண்டு  செய்தியாளர்கள், இரண்டு  ஒளிப்பதிவாளர்கள்,    இரண்டு  ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்களுக்குச்  செய்தியாளர் அட்டைகளை அளிக்கிறது.

சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவைகளைப் பெற முடியும். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகள், வீட்டிற்கான காலிமனைகள் போன்றவைகளை பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும்.

No comments:

Post a Comment