Pages

Saturday 2 July 2011

இடனறிதல்!

படத்தில் இவ்வளவு மகிழ்வாகச் சிரித்துக் கொண்டிருப்பவர்
சேலம் மாவட்ட ஆட்சியரான திரு. மகரபூஷணம் அவர்கள்.


எந்த இடத்தில் இருந்து அவர் சிரித்துக் கொண்டிருந்தார் தெரியுமா?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சங்ககிரி அருகே ரயில்வே பாதையை கடக்க முயன்ற இரண்டு வாகனங்கள் ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்... 



விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட ஆட்சியர் அழுகையும் கூக்குரலும் கேட்டுக் கொண்டிருந்த அந்த இடத்தில் இருந்துதான் இப்படிச் சிரித்துக் கொண்டிருந்தார்.





நான்கு உயிர்கள் பலியானதிற்காக  வருத்தப்பட்டு ஆட்சியர் இரு துளி கண்ணீர் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை இது போல  சிரித்து அங்கிருந்தவர்களின் வேதனையை அதிகரிக்காமலாவது இருந்திருக்கலாம்” –  அந்த இடத்தில் இருந்தவர்களின் ஆதங்கம் இது....

2 comments:

  1. சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் சிரித்துகொண்டே அழுகின்றேன்

    ReplyDelete
  2. இறந்தது எதிரியாகவே இருந்தாலும் வருந்தும் மனநிலை அனைவருக்கும் வர வேண்டும்.

    ReplyDelete